Nội dung text Tamilum Thozhilnutpam Unit 4 Final VK VK.pptx
“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு. ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவைப்படும் அடிப்படையான மூன்று விஷயங்கள் உணவு, உடை, இருப்பிடம் ஆகும். இவை மூன்றும் வேளாண்மையின் மூலம் ஒருவருக்கு கிடைக்கிறது. அந்த வேளாண்மைக்கு ஆதாரமாக நீர் அமைகிறது. தமிழரின் நீர் மேலாண்மைத் திறன் மிகத் தொன்மையானது. சங்ககாலம் தொட்டே நீரைக் கொண்டாடி, அதை பாதுகாத்துள்ளார்கள். சங்க காலத்தின் ‘முந்நீர் விழவு’ என நீருக்கு விழா எடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். வள்ளுவர் அரண் எனும் அதிகாரத்தில் ஒரு நாட்டுக்கு தேவையான அரணில் நீரினையே முதலாவதாக கூறுகிறார். வேளாண்மைக்கு ஏற்ற நீர்வளத்தை தமிழர்கள் திட்டமிட்டு அமைத்திருந்தனர். இந்தியாவிலேயே மழைநீரைத் தேக்கி வைத்து நீர்ப்பாசனத்திற்காக அதிக நீர்நிலைகளை ஏற்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள். மழைநீரை சேமிக்க தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங்களும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைக்கப்பட்டன மழைநீர் மட்டுமின்றி ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டியும் வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேமித்து வைத்துப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள். நீர் நிலைகளை குறிக்கும் பெயர்கள் அகழி, அசும்பு, அலந்தை, ஆவி, ஆறு, இலஞ்சி, இலந்தை, உடுவை, உவளகம், ஊரணி, எல்வை, ஏல்வை, ஏம்பல், ஏந்தல், ஏரி, ஓடை, கண்மாய், கயம், கால், கால்வாய், கிடங்கு, கிணறு, குட்டை,குட்டம், குண்டு, குண்டம், குண்டகம், குழி, குளம், கூவல், கூபம், கேணி, கோட்டகம், சட்டம், சலதரம், சிலந்தரம், சிக்கரி, சுனை, சூழி, சேங்கை, தடம், தடாகம், தம்மம், தாகம், தாங்கல், தரவு, பாக்கம், பொய்கை, மங்கல், மடு, மடுவு, மூழி, வலயம், வாக்கம், வாய்க்கால், வாவி இவை அனைத்தும் சங்க காலம் முதல் தற்காலம் வரை நீர் நிலைகளை குறிப்பிடும் பெயர்கள். நீர் நிலையை குறிக்க, இத்தனை பெயர்கள் இருப்பதே தமிழர்கள் வாழ்வு நீரோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்று. 4.1 நீர்ப்பாசனம்