PDF Google Drive Downloader v1.1


Báo lỗi sự cố

Nội dung text Tamilum ThozhilnutpamUnit 1 Final VK VK.pptx

நெசவு மற்றும் பானைத் தொழில்நுட்பம்
உலகமெங்கும் மனிதர்களின் முதல் தேவை உணவும் உடையுமேயாகும். மனிதனின்‌ அடிப்படைத்‌ தேவைகளுள்‌ ஆடை இன்றியமையாதது. ‘என்பது மனிதனது இன்றியஆடையுடையான் அவைக்கஞ்சான்’ ‘ஆடையில்லா மனிதன்‌ அரை மனிதன்‌‘ இவை போன்ற பழமொழிகளெல்லாம் நெசவுத் தொழிலின் பயனைக் கூறுகின்றன. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ மையாத் தேவைகள் குறித்து நக்கீரர் கூறும் செய்தியாகும். ஆண்கள் மேல் துண்டும், கீழே வேஷ்டியும் மட்டும் அணிந்தனர் என்பதை நக்கீரரின் இத்தொடரால் அறியலாம். மண்ணாளும் வேந்தனாயினும் கல்வியறிவற்ற வேடனாயினும் மனிதனது அடிப்படைத்தேவைகள் இவ்விரண்டுமேயாகும். மனிதன் நாகரிகத்தின் முதற்படியில் எப்போது கால் வைக்கக் கற்றுக் கொண்டானோ, அன்றே அவனுக்கு ஆடை தேவையாக இருந்தது. நாகரிகம் வளராத பழங்காலத்திலேயே மக்கள் விலங்குகளைப் போல அல்லாமல் உடலை மறைத்தற்குரிய உடையினை அணிந்து மானத்துடன் வாழும் முறையினை அறிந்திருந்தனர். ஆதி காலத்தில் கடும் குளிர், வெப்பம், மழை போன்றவற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தழை, இலை ஆடைகளையும், மரப்பட்டை, மிருகங்களின் தோல்களையுமே உடுத்தி வாழ்ந்து வந்தது மனித சமுதாயம் மட்டும் தான். அந்நிலை மாறி தம் அறிவுத் திறத்தால் பருத்தியின் பஞ்சினை நூலாக நூற்று ஆடையாக நெய்து அணிந்தனர். ஆடை நெய்யும் தொழிலை நெசவுத் தொழில் என்கிறோம். நெசவுத் தொழிலுக்கு இன்றியமையாக் காரணமாக அமைவது பருத்தி. ஆடை அணியத் தொடங்கிய காலந்தொட்டு இன்று வரை நெசவுத்தொழிலும் அவற்றின் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு ஆடை எவ்வளவு இன்றியமையாதது என்பதை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை, “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்” 1.1 சங்ககாலத்தில் நெசவுத் தொழில்

சங்ககாலத்தில் மகளிர் தழையுடை, மரவுரி ஆகிய இயற்கை ஆடை அலங்காரங்களையும் பருத்தியாலும் பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளையும் அணிந்திருந்தனர். குறமகள் மாமரக் கொத்துகளை நடுவே வைத்து இலைகளையுடைய பூங்கொத்துகளைச் சுற்றிலும் வைத்துத் தொடுத்த பெரிய அழகிய தழைகளையுடைய ஆடையை உடுத்தினர். மரப்பட்டைகள் ஆடையாக அணியப்பட்டமை குறித்தும் பெண்கள் தழையுடை அணிந்தமை குறித்தும் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ‘சீரை தைஇய உடுக்கையர்’ என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இலை தழைகளையும் மலர்களையும் மரநாரிலும் நறை நாரிலும் தொடுத்துக் கட்டித் தழையுடையாகப் பெண்கள் அணிந்ததற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. துகில், கலிங்கம் செல்வந்தர்களும், அரசர்களும், ‘துகில்’ எனப்படும் ஆடை வகையினை அணிந்திருந்தனர். அரசன் கஞ்சியிட்டுச் சலவை செய்யப்பட்ட துகிலை (ஆடையை) அணிந்திருந்தான். “இழைமருங் கறியா நுழை நூற் கலிங்கம்” நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னை நாடி வந்த கூத்தர்க்கு இழை போன இடம் அறிய இயலாத நுண்ணிய நூலாற் செய்த கலிங்கத்தைக் கொடுத்து உதவினான் என்றும், மேலும் பொருநராற்றுப்படை என்னும் நூலில் “ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம்” என்று தொண்டைமான் பாணர்க்குப் பாலாவியை ஒத்த நூலாற்செய்த கலிங்கத்தை அளித்தான் எனக் கூறப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படையில், முருகனைப் போற்றும் நக்கீரர், முருகன் ‘நலம்பெறு கலிங்கம்’ எனும் ஆடையை அணிந்திருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

Tài liệu liên quan

x
Báo cáo lỗi download
Nội dung báo cáo



Chất lượng file Download bị lỗi:
Họ tên:
Email:
Bình luận
Trong quá trình tải gặp lỗi, sự cố,.. hoặc có thắc mắc gì vui lòng để lại bình luận dưới đây. Xin cảm ơn.