PDF Google Drive Downloader v1.1


Report a problem

Content text Tamilum Thozhilnutpam Unit 4 Final VK VK.pptx


“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு. ஒரு ம‌னித‌ன் வாழ்வதற்கு தேவைப்படும் அடி‌ப்படையான மூன்று ‌விஷய‌ங்க‌ள் உணவு, உடை, இரு‌ப்‌‌பிட‌ம்‌ ஆகு‌ம். இ‌வை மூ‌ன்று‌ம் வேளா‌ண்மை‌யி‌‌ன் மூ‌ல‌ம் ஒருவரு‌க்கு ‌கிடை‌க்‌கிறது. அ‌ந்த வேளா‌ண்மை‌க்கு ஆதாரமாக ‌நீ‌‌ர் அமை‌கிறது. தமிழரின் நீர் மேலாண்மைத் திறன் மிகத் தொன்மையானது. சங்ககாலம் தொட்டே நீரைக் கொண்டாடி, அதை பாதுகாத்துள்ளார்கள். சங்க காலத்தின் ‘முந்நீர் விழவு’ என நீருக்கு விழா எடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். வ‌ள்ளுவ‌‌ர் அர‌ண் எனு‌ம் அ‌திகார‌த்‌தி‌ல் ஒரு நா‌ட்டு‌க்கு தேவையான அர‌ணி‌ல் ‌நீ‌‌ரினையே முதலாவதாக கூறு‌கிறா‌ர். வேளாண்மைக்கு ஏற்ற நீர்வளத்தை தமிழர்கள் திட்டமிட்டு அமைத்திருந்தனர். இந்தியாவிலேயே மழைநீரைத் தேக்கி வைத்து நீர்ப்பாசனத்திற்காக அதிக நீர்நிலைகளை ஏற்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள். மழைநீரை சேமிக்க தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங்களும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைக்கப்பட்டன மழைநீர் மட்டுமின்றி ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டியும் வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேமித்து வைத்துப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள். நீர் நிலைகளை குறிக்கும் பெயர்கள் அகழி, அசும்பு, அலந்தை, ஆவி, ஆறு, இலஞ்சி, இலந்தை, உடுவை, உவளகம், ஊரணி, எல்வை, ஏல்வை, ஏம்பல், ஏந்தல், ஏரி, ஓடை, கண்மாய், கயம், கால், கால்வாய், கிடங்கு, கிணறு, குட்டை,குட்டம், குண்டு, குண்டம், குண்டகம், குழி, குளம், கூவல், கூபம், கேணி, கோட்டகம், சட்டம், சலதரம், சிலந்தரம், சிக்கரி, சுனை, சூழி, சேங்கை, தடம், தடாகம், தம்மம், தாகம், தாங்கல், தரவு, பாக்கம், பொய்கை, மங்கல், மடு, மடுவு, மூழி, வலயம், வாக்கம், வாய்க்கால், வாவி இவை அனைத்தும் சங்க காலம் முதல் தற்காலம் வரை நீர் நிலைகளை குறிப்பிடும் பெயர்கள். நீர் நிலையை குறிக்க, இத்தனை பெயர்கள் இருப்பதே தமிழர்கள் வாழ்வு நீரோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்று. 4.1 நீர்ப்பாசனம்

கல்லணை அமைந்துள்ள இடம் கல்லும் களிமண்ணும் சேர்த்து 1080 அடி நீளத்துக்கு கட்டப்பட்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுத்துவரும் அணை - கல்லணை இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை, தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில் தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது. கல்லணையை கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுப்டம் காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகள் கொண்டுவந்து போடப்பட்டது. அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். சர் ஆர்தர் காட்டன் பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன். அவரே கல்லணையை ‘மகத்தான அணை’ எனக் குறிப்பிட்டவர். அதிக நீர் வரத்தால், மண்மணல் மேடுகள் கல்லணைக்கு முன் குவிந்தன. காவிரிப் படுகை மண் மேடாக மாறியது. கொள்ளிடம் பள்ளப் படுகையாக மாறிவிட, ஆற்றில் வரும் நீர் முழுதும் கொள்ளிடத்தில் பாய, காவிரிப் பாசனப்பகுதி வறண்டது. இந்தப் பிரச்சனையிலிருந்து டெல்டாவை காப்பாற்ற யோசித்த ஆங்கிலேய அரசு, சர் ஆர்தர் காட்டனிடம் இந்த பணியை ஒப்படைத்தது. மணற்பாங்கான ஆற்றுக்குள் அடித்தளம் அமைக்கப் பள்ளம் தோண்டினால் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். நிச்சயம் நீர் ஊற்றில் அடித்தளம் அமைக்க முடியாது. பின் எப்படி கரிகாலன் கல்லணையை கட்டினார் என யோசித்த அவர் இதனை ஆய்வு செய்ய முடிவு செய்து, அணைக்கட்டின் அடித்தளத்தில் 12 அடி ஆழம் வரை குழி தோண்டிப் பார்த்திருக்கிறார். அணையின் ரகசியம் அப்போது தான் அவருக்கு தெரிந்திருக்கிறது. அணைக்கட்டின் 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டு இருக்கிறது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் கல்லணையை ‘மகத்தான அணை’ (Grand Anicut) என குறிப்பிட்டு இருக்கிறார். இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று போற்றப்படுக்கிறார். 19ஆம் நூற்றாண்டு வரை, ஆண்டு முழுவதும் நீர் ஓடுகிற மணற்பாங்கான படுகையின் மேல் அணை கட்டும் தொழில் நுட்பம் புரியாத புதிராகவே இருந்தது. கரிகாலனின் தொழில்நுட்பப் புதிரை அவிழ்த்து, தமிழர்களின் பெருமையை உலகுக்குச் சொன்னவர் சர். ஆர்தர் காட்டன் என்னும் ஆங்கிலேயப் பொறியாளர் ஆவார். .

Related document

x
Report download errors
Report content



Download file quality is faulty:
Full name:
Email:
Comment
If you encounter an error, problem, .. or have any questions during the download process, please leave a comment below. Thank you.