Content text Tamilum Thozhilnutpam Unit 5 Final VK VK.pptx
அறிவியல் தமிழ் மற்றும் கணித்தமிழ்
ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சியும் கல்விப்பயனும் அறிவியல் விழிப்புணர்வும், ஒட்டுமொத்த விளைவான தொழில் முன்னேற்றமும் சிறந்து விளங்க வேண்டுமென்றால், அந்த நாட்டில் வழங்கப்படும் கல்வி, அந்த நாட்டு மொழியிலேயே அமைதல் வேண்டும். உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டியுள்ள நமக்குத் தாய்மொழி வழிக்கல்வி பெரிதும் பயனளிக்கும். பிற மொழியில் பயிலும் போது, அம்மொழியின் கருத்துக்களைத் தம் மொழிக் குறிப்புகளாக மாற்றிச் சிந்திப்பதைத் தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தாய் மொழியில் பயின்று அதனால் கிடைக்கும் அறிவின் மூலம் விளையும் சிந்தனைகளே சிறப்பானவையாக விளங்கும் என்பதை வரலாற்று உண்மைகள் நமக்கு உணர்த்துகின்றன. அறிவியல் என்பது தனிப்பட்ட மனிதருக்கோ, நாட்டிற்கோ உரியதன்று. அது உலகம் முழுமைக்கும் பொதுவானது. அறிவியலின் பயன்களைப் படித்தவர், படிக்காதவர் என்னும் வேற்றுமையின்றி அனைவரும் பெறுகின்றனர். அறிவியலுக்கு மொழிக் கட்டுப்பாடு இல்லை. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளைச் சான்றாக எடுத்துக் கொண்டால், அந்நாடுகளிலெல்லாம் தாய் மொழி வழியே அனைத்து பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருவதைக் காணலாம். அந்த நாடுகளின் அறிவியல் சாதனைகளுக்கு மொழி தடையாக இல்லாமல் கருவியாக மட்டுமே இயங்கி வந்துள்ளது. ஜப்பான், சீனா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், பிற நாடுகளில் வெளியாகும் அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும், அவர்கள் தாய் மொழியில் உடனுக்குடன் மொழி பெயர்ப்பு செய்கின்றனர். இதனால் மொழி என்பது அறிவியலை பொருத்தவரை தொடர்பு ஊடகமாகவே செயல்படுகிறது. அந்த தொடர்பு ஊடகம் தாய்மொழியாக இருப்பின் கற்பதும் கற்பிப்பதும் எளிதாக அமையும். தமிழிலும் இந்த முறையை பின்பற்றலாம். அறிவியல் தமிழாக்கத்தில் கலைச்சொல்லாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. கலைச்சொல்லாக்கம் குறிப்பிட்ட துறையிலுள்ள கருத்துகளுக்குரிய பொருளை விளக்கப் பயன்படும் சொல் ‘கலைச்சொல்’ எனக் குறிப்பிடப்படுகிறது. இதற்குத் ‘துறை சொல்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. கருத்துகளை வரையறைக்குட்பட்டு, துல்லியமாக வெளியிடுவதே அறிவியலின் சிறப்புப் பண்பு. இதற்கு துணைபுரிவது அந்தந்த அறிவியல் துறையில் பயன்படும் கலைச்சொற்களே. தொடக்கத்தில் கலைச்சொற்களை தமிழில் மொழி பெயர்ப்பதில் சிக்கல்கள் எழலாம். முதற்கட்டமாக அறிவியல் அறிஞர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் இவர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். பின் துறைசார் கலைச்சொற்களை முறைப்படுத்தி வழங்க வல்லுனர் குழுவினை அமைத்து, தற்போது வழக்கில் உள்ள சொற்களையும், புதிதாக உருவாக்கப்படும் சொற்களையும் ஆராய்ந்து ஏற்புடையவற்றை ஏற்று அவற்றையே படைப்பாளர்கள் பயன்படுத்த வலியுறுத்தல் வேண்டும். இவற்றோடு ஒருங்கிணைப்பு குழு ஒன்றிணையும் அமைத்தல் வேண்டும். அறிவியல் தமிழின் பயன் அனைவரையும் சென்றடையும் வகையில், ஊடகத்தின் வழி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 5.1 அறிவியல் தமிழின் வளர்ச்சி
விண்டோஸ் பயன்பாடுகளில் தமிழ் 1984ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் வரைகலைப் பயனர் இடைமுகம் (Graphical User Interface) கொண்ட மெக்கின்டாஷ் இயக்க முறைமையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து 1985-இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸில் செயல்படும் விண்டோஸ் இயக்கத் தளத்தை வெளியிட்டது. 1990-இல் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்ட பிறகு அடிப்படைக் கணிப்பொறி அனுபவம் இல்லாதோரும் கணிப்பொறியை விரும்பிப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் கணிப்பொறியின் பரவல் அதிகரித்தது. சாதாரண மக்களுக்கான பயன்பாடுகள் அவரவர் தாய்மொழியில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், உலக மக்கள் தத்தம் தாய்மொழிக்கான எழுத்துருக்களையும் பயன்பாடுகளையும் உருவாக்கிக்கொண்டனர். இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் ஏராளமான தமிழ் எழுத்துருக்களையும் பயன்பாடுகளையும் உருவாக்கின. வட்டார மொழி எழுத்துருக்களை உருவாக்க உலகெங்கும் True Type Font என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இவற்றுள் எளிமையானவை 7-பிட் எழுத்துருக்கள். இவற்றில் 128 எழுத்துக் குறிகள் இருக்கும். அக்காலத் தமிழ் எழுத்துருக்கள் பெரும்பாலானவை இத்தகைய 7-பிட் குறியாக்கத்தைக் (encoding) கொண்டவை. இவை பெருமளவு தமிழ்த் தட்டச்சின் வடிவமைப்பை ஒத்தவை. இத்தகைய எழுத்துருக்களை உள்ளீடு செய்யத் தனிச்சிறப்பான நிரல்கள் (keyboard drivers) எதுவும் தேவையில்லை. இவற்றைக் கணிப்பொறியில் நிறுவிய பின் நேரடியாகச் சொல் செயலாக்கி (Word Processor), விரிதாள் (Spreadsheet), தரவுத்தளம் (Database) போன்ற எந்தப் பயன்பாட்டிலும் கையாள முடியும். அடுத்த கட்டமாக, ஐரோப்பிய மொழிகளைக் கணிப்பொறியில் பயன்படுத்துவதற்கென 8-பிட் குறியாக்க முறை (Extended ASCII) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 256 எழுத்துக் குறிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். விண்டோஸ் குறியாக்க முறை 1252 இதற்கு இடம் தந்தது. தமிழ் மொழியின் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளைத் தனித்தனியே அப்படியே உருவகித்துக் கொள்ள இடம் இருந்ததால், பழைய ஆப்செட் அச்சுத் தரத்துக்கு ஈடுகட்டும் வகையில் தமிழ் எழுத்துகளைக் கணிப்பொறி வழியாகச் சிறப்பாக அச்சிட முடிந்தது. தமிழ்ப் பத்திரிகைகள், பதிப்பகங்கள் அனைத்தும் 8-பிட் ஒருமொழிக் குறியாக்கத்தில் அமைந்த எழுத்துருக்களையே பயன்படுத்தத் தொடங்கின. ஆனாலும் இவர்கள் தங்கள் விருப்பப்படி உருவாக்கப்பட்ட எழுத்துருக்களையும் தத்தம் விருப்பப்படி அமைத்துக் கொண்டனர்; எந்த குறிப்பிட்ட குறியாக்க (encoding) முறையையும் பின்பற்றவில்லை. எழுத்துரு வடிவமைப்பு நிறுவனங்கள் அவர்கள் விருப்பப்படி குறியாக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 5.2 கணித்தமிழ் வளர்ச்சி